×

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார் இந்திய வம்சாவளி மாஜி அமைச்சர் தருமன்

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான தருமன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். சிங்கப்பூரில் செப்டம்பர் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதிபராக இருக்கும் ஹரிமா யாகோப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தருமன் கடந்த மாதம் அனைத்து அரசு பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தருமன் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். புதிய சகாப்தத்திற்கான அதிபராக இருக்க விரும்புகிறேன். சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில விதிமுறைகள் மற்றும் நாம் ஒருவருக்கொருவர் பணிபுரியும் விதம் ஆகியவற்றை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என நான் வலுவாக உணர்கிறேன் என்றார்.

The post சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார் இந்திய வம்சாவளி மாஜி அமைச்சர் தருமன் appeared first on Dinakaran.

Tags : former ,minister ,Tharuman ,Singapore ,Taruman Shanmugaratnam ,President ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்...