×

தேவதானப்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலி

தேவதானப்பட்டி, ஜூலை 25: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்துப்பாண்டி(40). இவர் நேற்று சில்வார்பட்டியில் இருந்து ஜெயமங்கலத்திற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சில்வார்பட்டி ஒத்தவீடு அருகே ஆண்டிபட்டியில் இருந்து தேவதானப்பட்டி நோக்கி சென்ற சரக்கு வாகனம் முத்துப்பாண்டியின் டூவீலர் மற்றும் பின்னால் வந்த மற்றொரு டூவீலர் ஆகியவற்றின் மீது மோதியது. இந்த விபத்தில் முத்துப்பாண்டி பலத்த காயமடைந்தார். பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த வருசநாடு தர்மராஜபுரத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் பலத்த காயமடைந்தார்.

இவர்களுடன் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரான தென்காசி சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த முருகன்(47) என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே முத்துப்பாண்டி பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த அறிவழகன், முருகன் ஆகியோருக்கு சிகிச்சை தொடர்கிறது. விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தேவதானப்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Palanichami ,Muthupandi ,Jayamangalam Meletheru ,Silwarpatti ,Dinakaran ,
× RELATED மனைவி பணம் தராததால் விவசாயி தற்கொலை