×

தேங்காப்பட்டணம் அருகே டிரைவரை தாக்கி செயின் பறிப்பு

புதுக்கடை, ஜூலை 25 : தேங்காப்பட்டணம் அருகே மினி டெம்போ டிரைவரை தாக்கி செயின் பறித்து சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேங்காபட்டணம் அருகே பனங்கால்முக்கு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சுஜின் (23). இவர் மினி டெம்போ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சஜின் (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று சுஜின் தனது வாகனத்தை அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு, தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த சஜின் வழிமறித்து சுஜினை தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றாராம். இது தொடர்பாக சுஜின் புதுக்கடை போலீசில் அளித்த புகார் பேரில் சஜின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

The post தேங்காப்பட்டணம் அருகே டிரைவரை தாக்கி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chain flush ,Coconutam ,PUDUKUKAGA ,Coconut Vandana ,Chain ,Coconut ,Dinakaran ,
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு