×

166 ரன்னில் சுருண்டது இலங்கை

கொழும்பு: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், இலங்கை அணி 166 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 48.4 ஓவரில் 166 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. தனஞ்ஜெயா 57, சண்டிமால் 34, ரமேஷ் 27, கேப்டன் கருணரத்னே 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பாக். தரப்பில் அப்ரார் 4, நசீம் 3, அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 6, ஷான் மசூத் 51 ரன்னில் வெளியேறினர். அப்துல்லா 74, கேப்டன் பாபர் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post 166 ரன்னில் சுருண்டது இலங்கை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Pakistan ,Sports ,Dinakaran ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து