×

நாளை மின்தடை அறிவிப்பு

 

திருப்புத்தூர், ஜூலை 24: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம் ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சிவல்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சிவல்பட்டி துணை மின்நிலையங்களில் இருந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ஆ.தெக்கூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவரயன்பட்டி, கொண்ணத்தான்பட்டி, துவார்,

முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் மற்றும் கீழச்சிவல்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம் மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களிலும் நாளை ஜூலை.25ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்புத்தூர் துணை மின்நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை அறிவித்துள்ளார்.

The post நாளை மின்தடை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Sivagangai district ,A. Tekur ,Geezachivalpatti ,Dinakaran ,
× RELATED உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற...