- திருவாரூர் முத்துபெட்டை
- முத்துப்பேட்டை
- திருவாரூர் மாவட்டம்
- ரோட்டரி சங்கம்
- புதுச்சேரி நடுநிலைப் பள்ளி
- கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனை
- திருவாரூர்
- மாவட்டம்
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை தனியார் மருத்துவமனை, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து நடத்திய 151 வது இலவச கண் சிகிச்சை முகாம் தலைவர் ஜாம்பை கல்யாணம் தலைமையில் நடைபெற்றது. இதில் 145 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 42 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் பகுருதீன், முன்னாள் தலைவர்கள் கோவி ரங்கசாமி, பாலகிருஷ்ணன், மெட்ரோ மாலிக், கணேஷ் மாணிக்கம், திருமேனி மகாலிங்கம், ராமமூர்த்தி, ராஜமோகன், சிதம்பர சபாபதி, கண்ணதாசன், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post இம்மாத இறுதியில் நடவுபணி நிறைவு திருவாரூர் முத்துப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.