×

நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் ஆய்வு பெரகம்பி மின் பகிர்மான இணைப்புகள் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவிற்கு மாற்றம் கோட்ட செயற்பொறியாளர் தகவல்

பெரம்பலூர்: செட்டிக்குளம் அருகேவுள்ள பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகள், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று, பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் (இயக்குதலும் காத்தலும்) அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம், செட்டிகுளம் தெற்கு பிரிவிற்கு உட்பட்ட பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை, மின் வட்ட சீரமைப்பு காரணமாக – உரிய வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளதால், திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி பெருநகரம், மின் பகிர்மான வட்டம், ரங்கம் கோட்டம், மண்ணச்சநல்லூர் உபகோட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு ஜூலை 22ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் பயனாளிகளும் மின்சார சம்பந்தமான அனைத்திற்கும் ரங்கம் கோட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என பெரம்பலூர் (இயக்குதலும் காத்தலும்) செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் ஆய்வு பெரகம்பி மின் பகிர்மான இணைப்புகள் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவிற்கு மாற்றம் கோட்ட செயற்பொறியாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Water Resource ,Manchanallur East ,Perakambi ,Chettikulam, Trichy district ,Mannachanallur East ,
× RELATED தமிழகத்தில் 1,076 கி.மீ கடற்கரை...