×

மின்சாரம் தாக்கி பெண் பலி

சிங்கம்புணரி, ஜூலை 23: சிங்கம்புணரி காசியாபிள்ளைநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பரமேஸ்வரி (46). இவர் நேற்று, வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரி மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சிங்கம்புணரி போலீசார் பரமேஸ்வரி உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

The post மின்சாரம் தாக்கி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Selvam ,Singampunari Kasiyapillainagar ,Parameswari ,
× RELATED தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு...