×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெறுகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்திலிகுந்து துவங்கியது. மேலும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களை கண்டும் மகிழ்ந்தனர். சந்தனக்கூடு ஊர்வலமானது  இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூரை சென்றடைந்தது.பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெறும் சந்தனம் பூசும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தாரை தப்பட்டை பேண்டு வாத்தியங்கள் உடன் மக்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக செல்வதற்கு போலீசார் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது….

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது..! appeared first on Dinakaran.

Tags : Nagoor Dargah ,Nagapattinam district ,Kanduri Festival ,Nagapattinam ,Kanduri ,Nagoor Dharga ,-year Kanduri Festival ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...