×

தாலிச்செயின் திருட்டு

 

மூணாறு, ஜூலை 22: கேரளா மாநிலம், மூணாறு அருகே மறையூர் பகுதியில் பத்தடிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. 8 மாத கர்ப்பிணியான இவர், தனது தாயார் சசிகலாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர், நித்யா மற்றும் அவரது தாயார் தங்கியிருந்த அறையில், அலமாரியில் இருந்த 3 பவுன் தாலிச் செயின் திருடிச் சென்றார். மின்சாரம் இல்லாததால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில், மறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தாலிச்செயின் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Moonaru ,Nitya ,Badadidifalam ,Moonaru, Kerala State ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் அருகே திருவிடந்தை...