×

மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் விழா: 23ம் தேதி கொடியேற்றம்

மாமல்லபுரம், ஏப். 10: மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வரும் 23ம் தேதி பிரம்மேற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் 63 திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் 10 நாள் சித்திரை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 10 நாள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து, 27ம் தேதி கருட சேவையும், 29ம் தேதி தேரோட்டமும், மே 1ம் தேதி தீர்த்தவாரியும், மே 2ம் தேதி தெப்ப திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளதாக திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் விழா: 23ம் தேதி கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chitrai Brahmotsavam ,Thiruvidantha Perumal temple ,Mamallapuram ,Brahmetsava ceremony ,Thiruvidantha Nityakalyana Perumal temple ,Nitya Kalyana ,Perumal ,Temple ,Thiruvidanthai ,Chitrai Brahmotsavam ceremony ,Thiruvidanthai Perumal Temple ,
× RELATED திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர்...