×

பணம் வைத்து சூதாடிய 8 வாலிபர்கள் கைது

 

ஈரோடு, ஜூலை 21: ஈரோடு மாவட்டம், கோபி கூகலூர் மண்ணுவகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், கோபி போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் கூகலூர் ராமன் வீதியை சேர்ந்த ராமசாமி மகன் முருகேஷ் (25), அதேபகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் குமார்(26), ராஜேந்திரன் மகன் முத்துக்குமார் (25), திருப்பதி மகன் சசி (25), குப்புசாமி மகன் மூர்த்தி (27), ஆரான் மகன் ஆனந்தன் (31), வேலுமணி மகன் திருமூர்த்தி (24) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,000 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post பணம் வைத்து சூதாடிய 8 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Gopi Koogalur Mannugadu ,Dinakaran ,
× RELATED சூறாவளி காற்று, மழையால் 120 ஹெக்டர் வாழை மரம் சேதம்