×

கரூர் ராயனூர் சாலையில் கூடுதல் மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும்

 

கரூர், ஜூலை 21: கரூர் ராயனூர் சாலையில் கூடுதல் மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ராயனூர் சாலையில் திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம், பைபாஸ் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்த பகுதியில் அதிகளவு குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. ஆனால், பிரதான, மாநகர பகுதியில் உள்ள இந்த பகுதியில் கரூர் ராயனூர் சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை மின் விளக்கு வசதி குறைவு காரணமாக இருட்டாகவே காணப்படுகிறது.

இதனால் இவ்வழியில் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களும் அவ்வப்போது நடந்தது வருகிறது. குறிப்பாக நடந்து செல்வோர் மற்றும் வயதானோர் பரிதவித்து வருகின்றனர். போதிய வெளிச்சம் குறைவு காரணமாக இரவு நேரங்களில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. எனவே, இதுபோன்ற இன்னல்களை தவிர்க்கும் வகையில் கரூர் ராயனூர் சாலையில் கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் ராயனூர் சாலையில் கூடுதல் மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur ,Rayanur Road ,Dinakaran ,
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...