×

விபத்தில் மூளைச்சாவு மூதாட்டி உடலுறுப்புகள் தானம்

வேளச்சேரி: பள்ளிக்கரணை, மனோகர் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சாந்தா (70). கடந்த 17ம் தேதி பள்ளிகரணை குளம் எதிரே வேளச்சேரி மெயின் ரோட்டை கடந்தபோது, பைக் மோதி படுகாயமடைந்தார. அவரை மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சாந்தாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் ஆலோசனைபேரில் அவரது 4 மகன்கள் மற்றும் உறவினர்கள் ஆலோசனை செய்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய நேற்று முன்வந்தனர்.

இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரது இரு கண்கள், கல்லீரல் ஆகியவைகளை தானமாக பெற்றனர். தகவலறிந்த பள்ளிகரணை போக்குவரத்து புல்னாய்வு போலீசார் மூதாட்டி சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய நாகப்பட்டினத்தை சேர்ந்த தீனாவை (21) கைது செய்தனர்.

The post விபத்தில் மூளைச்சாவு மூதாட்டி உடலுறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Shantha ,2nd Street, Manohar Nagar, Pallikaranai ,Pallikarani Pond ,
× RELATED கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு