×

திண்டுக்கல்லில் நாளை விவசாயி குறைதீர் கூட்டம்

 

திண்டுக்கல், ஜூலை 20: திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை ஜூலை 21ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானிய திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனை கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில் நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கிகள் மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளும், விவசாயம் சார்ந்த, கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் நாளை விவசாயி குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindukkal ,DINDUGUKAL ,Didigul ,Bouquet ,Day ,Dintugul District ,Reduction ,Tindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே விளை...