×

அரசு பேருந்து மீது பைக் மோதி வாலிபர் பலி

 

காரமடை, ஜூலை 20: காரமடையை அடுத்துள்ள சிக்காரம்பாளையம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (52). அதே பகுதியை சேர்ந்தவர் மங்களம்(32). இருவரும் பைக்கில் காரமடை- மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, கோவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தினை நீலகிரி மாவட்டம் குந்தா நுந்தலா பகுதியை சேர்ந்த ரவி (50) என்பவர் ஓட்டி வந்துள்ளார். பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.மகாலிங்கம் தனது பைக்கை அசுர வேகத்திலும், அதே வேளையில் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தவறான திசையில் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், காரமடை மின் மயானம் அருகே மகாலிங்கம் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த அரசு பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருசக்கர வாகனமும், பேருந்தின் வலது பக்க முன்புறமும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், சிகிச்சை பலனின்றி மங்களம் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அரசுப்பேருந்தின் டிரைவர் ரவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரசு பேருந்து மீது பைக் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Mahalingam ,Sikkarambalayam Kallipalayam ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு