×

ஆடிப்பூர உற்சவ பெருவிழாவை முன்னிட்டு கமலாம்பாள் தேர் கட்டுமான பணி மும்முரம்

 

திருவாரூர், ஜூலை 20: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இந்த ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ பெருவிழாவானது ஆண்டுதோறும் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெறும்.

நடப்பாண்டிற்கான இந்த விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 28ம் தேதி கமலாம்பாள் சன்னதி எதிரே சிவாச்சாரியார்கள் மூலம் பந்தகால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், விழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கமலாம்பாள் சன்னதி எதிரே இருந்து வரும் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றமானது நடைபெற்றது. மேலும் கடந்த 14ம் தேதி இரவு முதல் கமலாம்பாள் வீதியுலா காட்சியானது தினந்தோறும் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளி காளை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. மேலும் இன்று (20ம் தேதி) கைலாச வாகனத்தில் இந்த வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கமலாம்பாள் தேரோட்டமானது நாளை (21ம் தேதி) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர் கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராம்விதியாகராஜன், உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் அழகியமணாளன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

The post ஆடிப்பூர உற்சவ பெருவிழாவை முன்னிட்டு கமலாம்பாள் தேர் கட்டுமான பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Kamalampal Chariot ,Aadipura Utsava festival ,Tiruvarur ,Thiagarajaswamy ,Saivism ,
× RELATED தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து...