×

வங்கி பெண் ஊழியர் மாயம்

 

திருச்சி, ஜூலை 19: திருச்சியில் மாயமான வங்கி பெண் ஊழியரை போலீசார் தேடுகின்றனர். திருச்சி தென்னூர் அண்ணா நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரியாதேவி(43). இவரது கணவர் கோபாலகிருஷ்ணன்(43). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 19 வயதில் மகள் உள்ளார். பிரியாதேவி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி மெயின் சீனியர் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற பிரியாதேவி மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வங்கி பெண் ஊழியர் மாயம் appeared first on Dinakaran.

Tags : mayam ,Trichy ,Thennur Anna Nagar… ,Dinakaran ,
× RELATED காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல்