×

தாயிடம் அண்ணன் சண்டை போட்டதால் மாடியில் இருந்து மின் கம்பி மீது குதித்து கார்பென்டர் தற்கொலை

தாம்பரம்: மேற்கு தாம்பரம், மாந்தோப்பு சிவராஜ் தெருவை சேர்ந்தவர் எட்வின் பாபு. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு டேவிட், டேனியல் (23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் டேனியல் கார்பென்டர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தாய் செல்வியிடம் அண்ணன் டேவிட் சண்டை போட்டுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த டேனியல், எதற்காக அம்மாவிடம் சண்டை போடுகிறாய், இவ்வாறு அடிக்கடி சண்டை போடுவதால் வீட்டுக்கு வரவே பிடிக்கவில்லை எனக்கூறி கோபித்துக்கொண்டு பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனது நண்பர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, அதிகளவில் மது அருந்திய டேனியல், நண்பன் வீட்டின் முதல் மாடியில் இருந்து, அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது குதித்துள்ளார். இதனால் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடினார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தாம்பரம் தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், உயரழுத்த கம்பிகளில் சிக்கிக்கொண்டிருந்த டேனியலை மீட்டு, தீயணைப்பு வாகனத்தில் வைத்து சிபிஆர் சிகிச்சை கொடுத்து உயிர்காக்க முயற்சி செய்தனர். ஆனால், டேனியல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கன்காரணை போலீசார், டேனியலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தாயிடம் அண்ணன் சண்டை போட்டதால் மாடியில் இருந்து மின் கம்பி மீது குதித்து கார்பென்டர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Carpenter ,Tambaram ,Edwin Babu ,Mantoppu Sivaraj Street, West Tambaram ,David ,Daniel ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!