×

திருமழிசையில் ரூ.12 லட்சத்தில் புதிய மின்மாற்றி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருமழிசை மாசிலாமணி நகரில் புதிய மின்மாற்றியை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கிவைத்தார். பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட திருமழிசை பேரூராட்சி, காவல்சேரி ரோடு, மாசிலாமணி நகரில் குறைந்த மின்னழுத்தத்தை போக்கும்வகையில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில், ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு திருமழிசை கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் கே.கணபதி தலைமை வகித்தார்.

உதவி செயற்பொறியாளர் எஸ்.முரளி, உதவி பொறியாளர் கோதண்டமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினர். இதில் திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் உ.வடிவேலு, வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மின்மாற்றியை துவக்கிவைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். விழாவில், பேரூர் திமுக நிர்வாகிகள் செல்வம், தென்னரசு, சங்கர், நாகராஜ், சதீஷ், பாஸ்கர், கங்காதரன், எழிலரசன், வி.சங்கரன், சங்கர், கணேசன், வெங்கடேசன், வார்டு செயலாளர் டி.கே.வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமழிசையில் ரூ.12 லட்சத்தில் புதிய மின்மாற்றி எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Thirumazhisai ,Tiruvallur ,A. Krishnasamy ,Thirumazhisai Masilamani Nagar ,Kavalsery ,Municipality ,Constituency ,Tirumazhisai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு