×

உம்மன் சாண்டி ஒரு சிறந்த அரசியல்வாதி, உண்மையான மக்கள் தலைவர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

பெங்களூரு :மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (79) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உம்மன் சாண்டியின் உடல் பெங்களுரு மருத்துவமனையில இருந்து முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமான கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கேரள முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ஒரு உண்மையான மக்கள் தலைவர், பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். உம்மன்சாண்டியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவரது குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

The post உம்மன் சாண்டி ஒரு சிறந்த அரசியல்வாதி, உண்மையான மக்கள் தலைவர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Umman Sandy ,Chief Minister of Justice ,G.K. Stalin ,Bengaluru ,Former ,Chief Minister ,Kerala ,Muhammad Santi G.K. Stalin ,Chief of ,B.C. G.K. Stalin ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...