×

ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்பு தாக்கல்

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் இல்லாத முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாது. காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து தமிழக அரசு ஜனாதிபதி ஒப்புதலோடு புதிய சட்ட திருத்தம் கடந்த 2017ம் கொண்டு வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி மீண்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதையடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தமிழகத்தில் நடத்தப்படும் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடையில்லை என கடந்த மே 18ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு , கம்பாலா ஆகிய விளையாட்டு விவகாரத்தில் முன்னதாக அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது.

The post ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்பு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Supreme Court ,New Delhi ,PETA ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...