×

சின்னமனூர் அருகே வாலிபர் கொலையில் நண்பர்கள் 5 பேர் கைது

சின்னமனூர், ஜூலை 16: சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரை சேர்ந்தவர் யுவராஜா. இவரது செல்போனை நண்பரான சின்னமனூரை சேர்ந்த ஒண்டி (25) வாங்கிச் சென்றார். அதை திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இவர்களது நண்பரான வினோத்குமார் (24), கடந்த 2 நாட்களுக்கு முன்தினம் இரவு சின்னமனூர் நகராட்சி அலுவலகம் அருகே, செல்போனை ஒண்டியிடமிருந்து வாங்கித் தருவதாக கூறி, யுவராஜை அழைத்துச் சென்றார். அங்கு ஒண்டி மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் இருந்துள்ளனர். அப்போது செல்போன் பற்றி கேட்க, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒண்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை குத்திவிட்டு நண்பர்களுடன் தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த வினோத்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி உயிரிழந்தார்.

இதுகுறித்து சின்னமனூர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கொலை செய்த நண்பர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் பதுங்கியிருந்த துரைச்சாமிபுரம் கார்த்திக் (24), பள்ளிகோட்டை அஜய் (19), செல்வேந்திரன் (24), மாதவன் (24), செல்வக்குமார் (23) ஆகிய 5 பேரையும் நேற்று காலை போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான ஒண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சின்னமனூர் அருகே வாலிபர் கொலையில் நண்பர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Yuvaraja ,Erasakanayakanur ,Ondi ,
× RELATED கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்