×

புதுச்சேரி 100 அடி ரோட்டில் தனியார் விடுதியில் பெண்களை ஆபாச படம் பிடிக்க ரகசிய கேமரா

*மேலாளர், ஊழியர் மீது வழக்கு

புதுச்சேரி : புதுச்சேரி, மேரி உழவர்கரையைச் சேர்ந்தவர் பிரியன் (22). கல்லூரி மாணவரான இவர், நேற்று தனது தோழியுடன் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு விடுதிக்கு தங்களது உறவினர்களை (தம்பதியர்) சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த அறையில் தொலைபேசி வயர் இணைப்பு பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்த நிலையில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தனது செல்போன் உதவியுடன் அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அந்த பாக்சை பிரியன் பிரித்துள்ளார்.

அப்போது அவற்றில் மிகச் சிறிய அளவிலான நவீன தொழில்நுட்ப வசதியுடன்கூடிய ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பது உறுதியானது. கண்டுபிடித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து அதில் பதிவாகியிருந்த காட்சிகளை பரிசோதிக்க பிரியன் தரப்பு முயன்ற நிலையில் அதை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெண்களை தனிஅறையில் ஆபாசமாக படம்பிடித்து அவதூறு பரப்புதல் செயல்களில் ஈடுபட முயன்றதோடு அவற்றை அழிக்க முயற்சித்ததாக விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர் குறித்து உரிய ஆதாரங்களுடன் உருளையன்பேட்டை காவல் நிலையம் சென்று பிரியன் முறையிட்டார்.

இதையடுத்து கிழக்கு எஸ்பி சுவாதி சிங் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் பிரியன் அளித்த புகாரின் மீது விடுதியின் மேலாளர் புதுச்சேரி, தேங்காய்திட்டு, வசந்த் நகர் ஆனந்து (25), அரியாங்குப்பம் ஓடைவெளி ஆபிரகாம் (22) ஆகியோர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார் தலைமறைவான இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதேபோல் அந்த விடுதியிலுள்ள மற்ற அறைகளிலும் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான ஆய்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post புதுச்சேரி 100 அடி ரோட்டில் தனியார் விடுதியில் பெண்களை ஆபாச படம் பிடிக்க ரகசிய கேமரா appeared first on Dinakaran.

Tags : 100 ft Road ,Puducherry ,Mary Fowler ,Brien ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை