×

திண்டுக்கல் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

 

திண்டுக்கல், ஜூலை 14: திண்டுக்கல் அருகேயுள்ள குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ரேஷ்மா(23). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு ரேஷ்மா குடைபாறைப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

அங்கு மனமுடைந்த நிலையில் இருந்த ரேஷ்மா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டே ஆவதால் ஆர்டிஓ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

The post திண்டுக்கல் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,RTO ,Manikandan ,Kuttathu Awarampatti ,Reshma ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...