×

2022 – 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “ஊரக கண்டுபிடிப்பாளர் விருது”க்கு விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை: அறிவியல் நகரம் 2018-2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதினை வழங்கி வருகிறது. இவ்விருது ஊரக புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 2022 – 2023ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிவியல் நகரத்திற்கு ஆகஸ்ட் 30ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post 2022 – 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “ஊரக கண்டுபிடிப்பாளர் விருது”க்கு விண்ணப்பிக்கலாம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,City of Science ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...