×

கோர்ட்டில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை

 

பெரம்பலூர், ஜூலை 13: பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட் டம் முழுவதும் பிடிகட்டளை நிலுவையில் உள்ள குற்ற வாளிகளைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய் து பிடி கட்டளை உத்தரவை போலீசார் நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் பெரியம்மாபாளையம்,

தெற்குத் தெருவைச் சேர்ந்த சையது முஸ்தபா மகன் இப்ராஹிம் (23).என்பவர் மேற்படி வழக்கில் நீதிமன் றத்தில் கடந்த 2மாத கால மாக ஆஜர் ஆகாமல் தலை மறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், அவரை கைது செய்து நேற்று வேப்பந்தட்டை குற்றவியல் நடுவர் நீதிம ன்றத்தில் ஆஜர் செய்து குற்றவியல் நடுவர், இப்ரா ஹிமை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்த ரவிட்டதின் பேரில் அரும்பா வூர் போலீசார் இப்ராஹி மை பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

The post கோர்ட்டில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,District ,SP ,Shyamla Devi ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம்...