மிர்பூர்: வங்கதேச மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்தது. ஷபாலி 19, அமன்ஜோத் 14, மந்தனா 13, யஸ்டிகா 11, தீப்தி 10 ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 87 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கடுமையாகப் போராடிய கேப்டன் நிகர் சுல்தானா 38 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். ஷபாலி வீசிய கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில், 1 ரன்னுக்கு 4 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. தீப்தி சிறந்த வீராங்கனை விருது பெற்றார் (4-0-12-3). இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.
The post டி20 தொடரை வென்றது இந்தியா appeared first on Dinakaran.