×

புதியம்புத்தூரில் சிக்கன் கடை மோதலில் இருவருக்கு வெட்டு

 

ஓட்டப்பிடாரம், ஜூலை 10: புதியம்புத்தூரில் சிக்கன் கடையில் ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதியம்புத்தூர் கனி நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன்கள் பிரவீன் (23), பிரதீப் என்ற விமல் (24) ஆகியோர் இணைந்து புதியம்புத்தூர் புதுபச்சேரி செல்லும் ரோட்டில் சிக்கன் கடை நடத்தி வருகின்றனர். இங்கு தேனி மாவட்டம் குப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (21), ஜெயச்சந்திரன் (22) ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் புதியம்புத்தூர் கீழத் தெருவை சேர்ந்த மாரிமுத்து (29), சாமிநத்தம் சின்னராஜ் (27) ஆகியோர் இந்த சிக்கன் கடைக்கு வந்துள்ளனர்.

அப்போது கடை உரிமையாளர் பிரவீனுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரிமுத்து அரிவாளால் பிரவீனை வெட்டினார். பதிலுக்கு பிரவீனும் கடையில் இருந்த அரிவாளால் சின்னராஜை வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி மாரிமுத்து, சின்னராஜ், பிரதீப் என்ற விமல், சூரிய பிரகாஷ், ஜெயச்சந்திரன், பிரவீன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து பிரதீப் என்ற விமல், சூரிய பிரகாஷ், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 

The post புதியம்புத்தூரில் சிக்கன் கடை மோதலில் இருவருக்கு வெட்டு appeared first on Dinakaran.

Tags : Nayambuthur ,Ottapidaram ,
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி