- தஞ்சாவூர் மாவட்டம்
- குறிச்சி-பாலத்தாலி
- பேராவூரணி ஒன்றியம்
- பேராவூரணி
- குறிச்சி-பாலத்தள்ளி
- பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
- தின மலர்
பேராவூரணி, ஜூலை 11: பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் சேதமடைந்த குறிச்சி- பாலத்தளி இணைப்பு சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிச்சி-பாலத்தளி இணைப்பு தார்சாலை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களுக்கு இடுபொருட்கள் எடுத்து செல்வதற்கும், டிராக்டர், அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் அத்துடன் சாலைகளில் ஜல்லிகற்கள் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருவதோடு, தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுவதாக கூறுகின்றனர் இந்த சாலை பிரசித்த பெற்ற பாலத்தளி துர்க்கையம்மன் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. உடனே சாலையை சீரமைத்து, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தகவல் பேராவூரணி ஒன்றியத்தில் சேதமடைந்த குறிச்சி-பாலத்தளி இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.