தஞ்சாவூர், ஜூலை 11: தஞ்சாவூர் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பஞ்சநதம்(75) காலமானார். தஞ்சாவூர் கீழவாசல் சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் எஸ்.பஞ்சநதம். தொடக்கத்தில் அவரது சகோதரர் கலியபெருமாளுடன் இணைந்து பத்திரிகை ஏஜெண்டாக செயலாற்றி வந்தார். பிறகு தினகரன் நிருபராக பணியில் சேர்ந்து சுமார் 25 ஆண்டு காலம் பணியாற்றினார். அத்துடன் விளம்பர ஏஜென்சியும் நடத்தி வந்தார். அவரது மனைவி அமுதா 7 வருடத்திற்கு முன்பு காலமாகி விட்டார். எஸ்.பஞ்சநதம். கடந்த இரண்டு ஆண்டு காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு சித்ரா, மகேஸ்வரி ஆகிய இரண்டு மகள்களும் மாரிமுத்து என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கு தஞ்சை கீழவாசல் சுண்ணாம்புகார தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தஞ்சாவூர் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பஞ்சநதம் காலமானார் appeared first on Dinakaran.