×

தியாகதுருகம் அருகே வேலைக்கு சென்ற லாரி ஓட்டுநர் ஆற்றங்கரை ஓரம் சடலமாக மீட்பு

 

தியாகதுருகம், ஜூலை 11: தியாகதுருகம் அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக வந்த தகவலின்பேரில் வரஞ்சரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், வேளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் (36), இவருக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று தீக்ஷிதா (6), ருத்ரேஸ்வரன்(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள வினைதீர்த்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான லாரியில் பச்சையப்பன் ஓட்டுநராக வேலை பார்த்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவி லட்சுமியிடம் செல்போனில் வீட்டுக்கு வருவதாகவும், மீண்டும் வேலைக்கு செல்ல 10 நாட்கள் ஆகும் என கூறியுள்ளார். மீண்டும் தனது மனைவிக்கு செல்போனில் இரவு சுமார் 11 மணியளவில் அழைத்து தனக்கு நெஞ்சுவலி அதிகம் இருப்பதாக கூறினார். உடனே லட்சுமி மீண்டும் தனது கணவரை செல்போனில் அழைத்தபோது அவர் அழைப்பை எடுக்காததால் பச்சையப்பன் ஓட்டிவந்த லாரி உரிமையாளர் கோவிந்தராஜுக்கு போன் செய்துள்ளார்.

அவரும் போனை எடுக்காததால் கதறினார். இந்நிலையில் நேற்று அதிகாலை லட்சுமியின் உறவினர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் பச்சையப்பன் சடலமாக கிடப்பதாக தகவலால் கதறி உள்ளனர். இது குறித்து புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தனர். பிரேத பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

The post தியாகதுருகம் அருகே வேலைக்கு சென்ற லாரி ஓட்டுநர் ஆற்றங்கரை ஓரம் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thiagathurugam ,Velakurichi ,Thiagothurugam ,
× RELATED தியாகதுருகம் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி