×

ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

 

சேலம், ஜூலை 10: சேலம்-விருத்தாசலம் ரயில் மார்க்கத்தில், தண்டவாள சீரமைப்பு பணியை மேற்கொள்ள, நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு, சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி டி கார் என்னும் வண்டி சென்றது. இதனை லோகோ பைலட் நிஜாம்முதின் இயக்கிச் சென்றார். ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷனை கடந்து சின்னசேலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, தண்டவாள பகுதிக்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அந்த வண்டியின் முன் பாய்ந்தார். அவர் மீது மோதியபடி வண்டி கடந்து சென்றது. இதில், மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் எஸ்ஐ விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவஇடம் சென்று அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சுமார் 35 வயது மதிக்கதக்க அந்த வாலிபர், நீல நிற ஜீன்ஸ் பேண்ட், ஆரஞ்சு கலர் சட்டை அணிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எனத் தெரியவில்லை. தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் வண்டி வரும்போது முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த வாலிபரின் சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யார்?, எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Salem ,Virudhachalam ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்