- பாக்கிஸ்தான்
- புனே
- பிரதீப்
- பிரிவு
- இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
- டி.ஆர்.டி.ஓ.
- புனே, மகாராஷ்டிரா
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) பொறியியல் பிரிவு இயக்குநராக பிரதீப் மோரேஸ்வர் குருல்கர்(59) பணியாற்றி வந்தார். பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளி சாரா தாஸ்குப்தா என்பவர் குருல்கரிடம் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சாராவால் ஈர்க்கப்பட்ட குருல்கர் இந்திய ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை சாராவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அதிகாரப்பூர்வ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த குற்றச்சாட்டின்பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின்கீழ் குருல்கர் கடந்த மே 3ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஹனிடிராப் முறையில் இந்திய விஞ்ஞானியை ஏமாற்றி பாகிஸ்தானை சேர்ந்த பெண் இந்திய ஏவுகணை ரகசியங்களை பெற்றதாக குருல்கருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட சாராவின் ஐபி எண் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தது என்பது உறுதியாகி இருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
The post பெண் உளவாளியிடம் மயங்கி இந்திய ஏவுகணை ரகசியங்களை பாக்.கிற்கு பகிர்ந்த விஞ்ஞானி appeared first on Dinakaran.