×

அடிக்கடி செல்போன் பார்த்ததை பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த ‌ஜல்லடியன்பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். பெயின்டர். இவரது மனைவி ராணி. தூய்மை பணியாளர். இவர்களுக்கு யுவ (20) என்ற மகளும், மாதேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். யுவ, கவுரிவாக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் ராணி வேலைக்கு சென்றுவிட்டார். யுவ, வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் வேலை முடிந்து ராணி வீட்டிற்கு வந்தார். கதவு உள்பக்கம் பூட்டப்படிருந்தது. கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ராணி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். மின்விசிறி கொக்கியில் துப்பட்டாவால் யுவஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

தகவலஅறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, யுவயின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, மாணவி யுவ அடிக்கடி செல்போன் உபயோகித்து வந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் மாணவி தற்கொலையில் வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வேளச்சேரி அருகே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

The post அடிக்கடி செல்போன் பார்த்ததை பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Velachery ,Selvaraj ,Tagore Street, Jalladianpet ,Rani ,
× RELATED சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!