×

விவசாயி தற்கொலை

 

வடமதுரை, ஜூலை 8: வடமதுரை அருகே காணப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (43). விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மூத்த மகன் நேற்று முன்தினம் படிக்காமல் செல்போனில் விளையாடியதாகவும், தந்தை சுப்பையா கண்டித்ததாகவும் தெரிகிறது. அப்போது மூத்த மகன் தந்தையை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த சுப்பையா விஷ விதையை தின்று மயங்கினார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே சுப்பையா உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி செல்வி அளித்த புகாரில் வடமதுரை எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Subpaiah ,Kanappadi Ramanathapuram ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...