×

திம்மராய பெருமாள் கோயில் புனரமைப்பு பணிகள் துவங்கியது

தர்மபுரி, ஜூலை 8: தர்மபுரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் கோயிலில் புனரமைப்பு பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது. தர்மபுரி அன்னசாகரம் கிராமத்தில், சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் கட்டுமான பணி, கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று கோயில் வாசக்கால் நடும் பணி பூஜையுடன் தொடங்கியது. ராட்சத கிரேன் கொண்டு, கோயில் வாசல் கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊர் தர்மகர்த்தா மாரிமுத்து, நகர மன்ற உறுப்பினர் ராஜாத்தி ரவி, ஊர் பிரமுகர்கள் பூக்கடை ரவி, நம்பிராஜன், நடராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திம்மராய பெருமாள் கோயில் புனரமைப்பு பணிகள் துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Thimmaraya Perumal Temple ,Dharmapuri ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்