×

எம்எல்ஏ ஆகத்தான் டிரை பண்றாரோ… பேரவையில் எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்த மர்மநபரால் பரபரப்பு: டி.கே.சிவகுமார் அருகே சென்று வாழ்த்தினார்

பெங்களூரு: பெங்களூரு விதான சவுதாவில் நுழைவதற்கு நான்கு வாயில்கள் உள்ளன. இந்த வாயில்களின் வழியாக நுழைகிற நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி ஆவணங்களை பரிசீலனை செய்வர். அதன் பிறகு விதான சவுதா உள்ளே செல்வதற்கு அனுமதி கிடைக்கும். விதான சவுதாவில் நுழைந்த பிறகு பேரவை வளாகத்திற்குள் நுழைவதற்கு தனியாக அடையாள அட்டை வேண்டும். பேரவை வளாகத்திலுள்ள காவலர்கள் சோதனை செய்த பிறகே அந்த நபர் பேரவைக்குள் அனுமதிக்கப்படுவார்.

இந்நிலையில் பேரவையில் நேற்று சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி கொண்டிருந்த போது 72 வயதான ஒரு நபர் முளகல்மூரு தொகுதி எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த நபர் எம்எல்ஏ இல்லை என்பதை தெரிந்துகொண்ட தேவதுர்கா எம்எல்ஏ ஷரணகவுடா, அவரிடம் எந்த தொகுதி எம்எல்ஏ என கேட்டதற்கு முளகல்மூரு தொகுதி எம்எல்ஏ என கூறியுள்ளார். முளகல்மூரு எம்எல்ஏ கோபாலகிருஷ்ணா என்பதை அறிந்திருந்த ஷரணகவுடா, மர்மநபர் குறித்து அவை காவலர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்து இருந்த அந்த நபர் மெதுவாக எழுந்து துணை முதல்வர் சிவகுமாருக்கு வாழ்த்து கூறிவிட்டு பேரவையில் இருந்து வெளியேறி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சபாநாயகர் யு.டி காதரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விதான சவுதாவில் போலீஸ் டிசிபி ஸ்ரீனிவாஸ் கவுடா நிருபர்களிடம் கூறியதாவது: ‘விதான சவுதாவில் நுழைந்த நபர் வழக்கறிஞர் திப்பேருத்ரா என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 72 வயதான நபர் சட்டமன்றத்துக்குள் எப்படி, எதற்காக சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post எம்எல்ஏ ஆகத்தான் டிரை பண்றாரோ… பேரவையில் எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்த மர்மநபரால் பரபரப்பு: டி.கே.சிவகுமார் அருகே சென்று வாழ்த்தினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Dry Peruro ,T. K.K. Sivakamar ,Bengaluru ,Suta ,Dry ,Peruro ,D.C. K.K. Sivagamar ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...