×

உக்ரைன் மீது ஏவுகணை வீச்சு 4 பேர் பலி

லிவ்: மேற்கு உக்ரைன் நகரமான லிவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ரஷ்யாவுடனான போர் தொடங்கியதில் இருந்து தற்போது லிவ் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகப்பெரிய தாக்குதலாகும். இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் 60 அடுக்குமாடி குடியிருப்புக்கள் மற்றும் 50 கார்கள் சேதமடைந்துள்ளன” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

The post உக்ரைன் மீது ஏவுகணை வீச்சு 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Lviv ,Russia ,Home Minister ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி