×

2 பெண்களிடம் நகை பறிப்பு

 

கோவை, ஜூலை 6: கோவை குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பிரேமா (56). இவர், பக்கத்து தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர் திடீரென கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை பறித்து தப்பி செல்ல முயன்றார். அதிர்ச்சியடைந்த பிரேமா நகைகளை விடாமல் கைகளால் பிடித்து கொண்டார். ஆனால், நகையில் பாதி துண்டாகி விட்டது. சுமார் அரை பவுன் தங்க நகை பறித்த அந்த நபர் தப்பினார். ஒன்றரை பவுன் தங்க நகை பிரேமா விடாமல் பிடித்து கொண்டார்.

இதுகுறித்து பிரேமா குனியமுத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.இதேபோல், கோவை இருகூர் மகாகவி நகரை சேர்ந்தவர் ராதாமணி (65). இவர் வீட்டு முன் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மர்ம நபர் ராதாமணியிடம் முகவரி கேட்பது போல், நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை பறித்துக்கொண்டு அருகே நிறுத்தியிருந்த தனது பைக்கில் ஏறி தப்பி சென்றார். இதுகுறித்து ராதாமணி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post 2 பெண்களிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Easwaran ,PK Puthur ,Kuniyamuthur ,Prema ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்