×

மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி-சிறுவன் படுகாயம்

தர்மபுரி: மகேந்திரமங்கலம் அருகே மைதீன் நகரைச் சேர்ந்த நசீர் மகன் நதீம் (27). தச்சு தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் குண்டன்காடு பகுதிக்கு வேலை சென்றுவிட்டு மாலையில், உறவினர் மோசின் (16) என்பவருடன், டூவீலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வெள்ளிச்சந்தை- காரிமங்கலம் ரோட்டில், கருக்கனஅள்ளி டாஸ்மாக் கடை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நதீம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோசின் படுகாயமடைந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நதீமுக்கு வரும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், விபத்தில் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

The post மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி-சிறுவன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Nasir ,Nadeem ,Mydeen ,Mahendramangalam ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு