×

நெல்லை மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

நெல்லை, ஜூலை 6: நெல்லை மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அலுவலராக சின்னராஜூ பொறுப்பேற்றுக்கொண்டார். நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றிய திருப்பதி கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து நெல்லை மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அலுவராக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றிய சின்னராஜூ பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பிற்பகல் நெல்லைக்கு வந்து புதிய முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து புதிய முதன்மைக்கல்வி அலுவலருக்கு வட்டார கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post நெல்லை மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அலுவலர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,District ,Nellau ,Chinnaraju ,Naddy District ,Primary ,Nelly District ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டத்தில் நிழற் பந்தல் மீது லாரி மோதி விபத்து!!