×

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு

 

திருத்தணி: திருத்தணி நகராட்சி ஆணையராக இருந்த ராமஜெயம் கடந்த 30ம் தேதியன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா கூடுதல் பொறுப்பாக திருத்தணி நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஷா நேற்று நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, அவருக்கு நகராட்சி மேலாளர் நாகரத்தினம், நகராட்சி அலுவலர்கள் ஜெகநாதன், ராஜேஷ், முரளி, முருகன், சரவணன், நரசிம்மன் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்.

இதற்கு முன்னதாக கூடுத.ல் பொறுப்பேற்று கொண்ட ஷா திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி மற்றும் துணைத் தலைவர் சாமிராஜ், நகராட்சி அலுவலர் ரவி, நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜன் காமேஸ்வரன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

The post திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Municipal Commissioner ,Thiruthani ,Ramajayam ,Tiruvallur Municipality ,Thiruvallur ,Municipal Commissioner ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து