×

பசுமைப்பண்ணை கடைகளை அதிகரிக்க டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த பசுமைப் பண்ணைக் கடைகளை திறக்கவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பசுமைப் பண்ணைக் கடைகளை, நியாய விலை கடைகளுக்கு இணையாக திறக்க வேண்டும். விவசாயிகள், உற்பத்தியாளர்களிடம் இருந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்து, பொது மக்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் வெளிச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் விவசாயிகள் உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்கும். நுகர்வோருக்கும் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட வழிவகை செய்ய முடியும்.

The post பசுமைப்பண்ணை கடைகளை அதிகரிக்க டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TTV.Thinakaran ,CHENNAI ,AAMUK ,general secretary ,DTV ,Dinakaran ,TTV ,
× RELATED மாற்று இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் டிடிவி கோரிக்கை