×

காட்டு எருமை தாக்கி தொழிலாளர்கள் காயம்

 

மூணாறு, ஜூலை 5: கேரளா மாநிலம் மூணாறில் கண்ணன் தேவன் கம்பெனிக்கு உட்பட்ட லட்சுமி எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் பீல்டு எண் 19ல் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வேகமாக ஓடி வந்த காட்டு எருமை கிறிஸ்டி என்பவரை கொம்புகளால் தூக்கி எரிந்து விட்டு ஓடி மறைந்தது.

இதில் கிறிஸ்டி பலத்த காயமடைந்தார்.அதே நேரம் காட்டு எருமை தாக்குதலில் இருந்து தப்பிய ஓடிய மணி என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார். அங்கிருந்த தொழிலாளர்கள் உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு, மூணாறு ஹை ரேஞ்சு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இப்பகுதியில் காட்டு எருமைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

The post காட்டு எருமை தாக்கி தொழிலாளர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,Lakshmi Estate West Division ,Kannan Devan Company ,Munnar, Kerala State ,Dinakaran ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்