×

மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்ப்பு கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 4: மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். பின்னர், கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டியும் மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை சின்னத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மதுரை மத்திய தொகுதியின் பகுதி செயலாளர் ஸ்டாலின், மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் சம்பவங்களை கண்டித்து உரையாற்றினார்.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற, கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, சமய நல்லிணத்திற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

The post மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்ப்பு கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Christians ,Manipur riots ,Madurai ,Manipur riot ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்:...