×

திருத்துறைப்பூண்டியில் தாம் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் புரஐக்டர்

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 4: திருத்துறைப்பூண்டியில் தாம் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் புரஜக்டர் வழங்கினர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு உதவிபெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 91 ஆண்டு படித்த மாணவிகள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அம்மாணவிகள் தாம் கல்வி பயின்ற பள்ளிக்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி ஒவ்வொரு மாணவிகளும் அவரவர் பங்களிப்பாக சேர்ந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள புரஜக்டர் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், தலைமை ஆசிரியை அல்போன்ஸ் மேரி மற்றும் ஆசிரியைகள், அருட்சகோதரிகள், முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டியில் தாம் கல்வி பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் புரஐக்டர் appeared first on Dinakaran.

Tags : Thirutharapoondi ,Thiruthuraapoondi ,Tiruvarur District ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்