×

கலெக்டர் அழைப்பு தா.பழூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்

தா.பழூர்:அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தா.பழூரில் பேருந்து நிலையம் மற்றும் பொது கழிப்பிடம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், பெண்கள் செவிலியர் கல்லூரி, கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். அனைத்து ஆதிதிராவிடர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும், ஆதிதிராவிடர் தெருக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தார் சாலை, சிமென்ட் சாலை, மின்விளக்கு, சுகாதார வளாகம் போன்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமையில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் செங்குட்டுவன், ஒன்றிய அமைப்பாளர் காரைக்குறிச்சி மாதவன், ஆண்டிமடம் (மே) ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், கோபி வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வநம்பி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.மேலும் மாநில துணைச் செயலாளர்கள் அன்பானந்தம், இளங்கோமணி, கண்.கொளஞ்சி, அரியலூர் தொகுதி செயலாளர் மதி(எ)மருதவாணன், மாநிலத் துணைச் செயலாளர் கருப்புசாமி மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாலா பாலு நன்றி கூறினார்.
விசி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

The post கலெக்டர் அழைப்பு தா.பழூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palur ,T.D. ,Pamoor ,Ariyalur ,District ,T.A. Padur ,Padur ,station ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது