×

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் எனும் தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; அமைச்சர்கள் கீதாஜீவன், சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

சென்னை: முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் எனும் தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே 3 முறை ஆலோசனை நடைபெற்று முடிந்திருந்த நிலையில் தற்போது 4வது முறையாக ஆய்வு கூட்டமானது நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி, கீதாஜீவன், சக்கரபாணி, சாமிநாதன், பெரிய கருப்பன், காந்தி, டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் ஆலோசனை கூட்டத்தில் பொன்முடி பங்கேற்றுள்ளார். சேலம் செல்லாமல் முதலமைச்சர் உடனான ஆலோசனையில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று உள்ளார்.

The post முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் எனும் தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; அமைச்சர்கள் கீதாஜீவன், சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mutham Schemes ,G.K. Stalin ,Getajivan ,Chakrapani ,Chennai ,Chief Minister ,M.D. G.K. Stalin ,Chennai Leadership Secretariat ,Principal ,B.C. ,Chakarapani ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...