×

உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் பணியிட மாற்றம்; உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலனுக்கு கூடுதல் பொறுப்பு.! தமிழக அரசு உத்தரவு

சென்னை : உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., டேவிட் தேவாசீர்வாதம் உள்பட, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

* உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த, டேவிட் தேவாசீர்வாதம், காவல் தலைமையக, ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஆவடி, போலீஸ் கமிஷனராக உள்ள அருண், சென்னை சட்டம், ஒழுங்கு பிரிவு, ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை, சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக உள்ள சங்கர், ஆவடி, போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* அதேபோல், உளவுத்துறை ஐ.ஜி.,யாக உள்ள செந்தில் வேலனுக்கு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

The post உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் பணியிட மாற்றம்; உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலனுக்கு கூடுதல் பொறுப்பு.! தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Davidson ,Senthil ,Waylon ,Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu ,Intelligence A.A. ,Tamil Nadu Government ,
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...